அன்பே உயிர்களின் ஆறுதல்

அன்பே உயிர்களின் ஆறுதல்..
-----------------------------
தேடும் விழிகள்
காணும் நாளில்
பாடும் மொழிகள்
நாடும் பாதம்!

ஓடும் வாழ்வில்
ஓய்வாய் வருவாய்
ஈடும் இணையும்
இல்லா உயிராய்!

சூடும் சுகமும்
எல்லாம் தருவாய்
வீடும் பேறும்
நீயே அருள்வாய் !

ஏடும் எழுத்தும்
யாவும் நீயே!
வாடும் உயிரின்
ஆறுதல் அன்பே !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (15-May-22, 12:05 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 124

மேலே