பெண்கள்..!!

வெறியேறியது மனிதர்களிடம்
பெண்கள் படும்பாடு
சித்திரவதையும் சிலுமிஷம்
தான் அதிகம்..!!

காமத்தில் வாடும்
ஆண்கள் வேதனைத்தீயில்
பெண்களை போட்டு
எரித்து விடுகிறார்கள்..!!

என்னதான் காலம்
கடந்து இருந்தாலும்
காமமும் பின்னோக்கி
தொடர்ந்து வருகிறது..!!

அன்பெனும் தீயில்
ஆசைகள் மட்டும்
கொழுந்துவிட்டு எரிகிறது
கொல்லைப் புறமாக..!!

இன்பமும் துன்பமும்
மாறி மாறி வருகையில்
இன்னும் எத்தனை காலம்
தான் இப்படி வாழ்வது..!!

இறைவா
விடியலை நோக்கி
பயணிப்பது இரவுகள்
மட்டுமல்ல சில இதயமும் தான்..!!

எழுதியவர் : (18-May-22, 3:17 pm)
பார்வை : 47

மேலே