நீ இல்லா உலகம்
நீ இல்லா உலகம்...
------------------------------
சாலைகள் எல்லாம் வெறுமையாய்க் காட்சியளிக்கின்றன.!
சோலைகளும் காலியாய் ..
மேலே பறவைகளும் கீழே மனிதர்களும் மட்டுமே !
கடைகள் யாவுமே திறந்து கிடக்கின்றன ...
ஆங்காங்கே வாடிக்கையாளர் கொஞ்சமாய்!
நடைபாதைகளிலும் ....
நடப்போர்க் கூட்டமும் நாய்களுமே !
எல்லாமும் தலைகீழாக மாறிக் கிடக்கிறது ,...
உந்தன் பிரசன்னம்
ஒன்று மட்டும் இல்லாமையால் !
-யாதுமறியான்.