அத்தி மது - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
அத்திமே கஞ்சூ(டு) அதிமயக்கந் தாகமும்போம்
அத்திமர வேரிலண் டாமதுவில் - நித்தியமுஞ்
சீனியெ னும்பேயன் செங்கனியே னுங்கலந்தே
பானுவுத யங்குடித்துப் பார்
- பதார்த்த குண சிந்தாமணி
அத்தி மரவேரிலிறங்கிய கள்ளில் சீனிச்சர்க்கரை , பேயன் வாழை கலந்து தினமும் சூரியன் தோன்றும் நேரத்தில் உண்டால் அத்தி மேகம், உட்சூடு, மூர்ச்சை, தாகம் இவை நீங்கும் .