அஞ்சனம் பூசினள் அன்றலர் பெண்பாவை - வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

அஞ்சனம் பூசினள் அன்றலர் பெண்பாவை
நெஞ்சினில் நின்றிடும் நேர்கொண்ட பார்வையால்
அஞ்சுதல் நீக்கியே ஆக்கமாய் வாழ்பவள்;
சஞ்சலம் தீர்த்திடும் சக்தியாம் என்பேனே!

- வ.க.கன்னியப்பன்

எடுத்துக் காட்டு:

030 திருஅரதைப் பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்)
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
(’ய்’இடையின ஆசு)

பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி
மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை
நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே 1

- திருஞானசம்பந்தர் தேவாரம் - மூன்றாம் திருமுறை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jun-22, 9:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே