தேனின் நிகர்த்தவளாம் தென்றல் போல்வாளே - கலிவிருத்தம் – இன்னொரு வகை
(தேமா கருவிளங்காய் மா தேமாங்காய்)
கானின் மயிலனையாள் கற்ப கம்போன்றாள்
மானின் விழியிணையாள் மருளும் பெண்தானே
வான நிலவொளியில் வந்து நின்றாடும்
தேனின் நிகர்த்தவளாம் தென்றல் போல்வாளே!
குறிப்பு:
நான்கடிகளிலும் சீர் ஒழுங்கைக் கவனிக்க வேண்டும்!
முதல் சீர் - நான்கடிகளிலும் தேமா;
இரண்டாம் சீர் - நான்கடிகளிலும் கருவிளங்காய்;
மூன்றாம் சீர் - நான்கடிகளிலும் மா;
நான்காம் சீர் - நான்கடிகளிலும் தேமாங்காய்;
- வ.க.கன்னியப்பன்
எடுத்துக் காட்டு:
கலிவிருத்தம்
(தேமா புளிமாங்காய் மா மாங்காய்)
தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி
வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய
ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
ஆனான் கழலேத்த வல்ல லடையாவே 2
- 083 திருஅம்பர்மாகாளம், முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்
நான்கடிகளிலும் சீர் ஒழுங்கைக் கவனிக்க வேண்டும்!