இதயம் வலித்தது தெரிந்தது உனக்காக 555

***இதயம் வலித்தது தெரிந்தது உனக்காக 555 ***
என்னவளே...
ஆசை ஆசையாய் எத்தனை
கனவுகள் என்னுள்...
என் ஆசைகளை எல்லாம் நிராசையாக
போகவே சாபமோ என்னவோ...
பலமுறை உனக்கு
புரியவைக்க முயற்சித்து...
உன்னிடம் தோற்றுவிட்டேன்...
அதுவே என் வெறுப்புக்கு
காரணமாகவே...
என் இதயம்
வலித்தது தெரிந்தது...
உனக்காக
நான் அழுத போதுதான்...
உன்னை அவ்ளோ
புடிக்கும் தெரிந்தது எனக்கு...
நான் விவரித்த
எல்லாத்தையும் கேட்டுவிட்டு...
எளிமையாக சொல்கிறாய்
எனக்கு புரியவில்லை என்று...
உன்னை
எதிர்பார்த்து எதிர்பார்த்து...
என் கண்களும்
வலியில் சோர்ந்துவிட்டது...
மறக்க நினைத்தாலும்
சில நேரம் மலராகவும்...
பல நேரம் முட்களாகவும்
கொள்கிறது என்னை...
என் சாபம் தீர
சமாதானத்திற்கு வருவாயோ...
காத்திருக்கிறேன் நான்.....
***முதல்பூ.பெ.மணி.....***