உன் நினைவுகளும் சுகம்தான் 555

***உன் நினைவுகளும் சுகம்தான் 555 ***


ப்ரியமானவளே...


நீயும் நானும்
பாடிபறந்த நாட்களில்...

அப்படியே இருந்துவிடலாம்
சந்தோசம் என்
றாய்...

நீயும் நானும் இனி
சந்திக்காமல் இருப்பது...

நமக்கு நல்லது என்றாய்
சிரித்துக்கொண்டே
...

நாம் சேர்ந்திருந்த நாட்களை
நீ மறந்துவிடலாம்...

உன்னை நான் மறக்கும்
அளவுக்கு நேசிக்கவில்லை...

நீயு
ம் என் அன்பை
முழுவதும் உணரவில்லை...

கரம் பிடித்து வாழ்வது
மட்டுமே இன்பம் என்றால்...

பலருக்கும் அது
கிடைப்பதில்லை காதலில்...

நிஜங்களோடு மட்டுமல்ல...

உன் நினைவுகளோடு
வாழ்வதும் சுகம்தான் எனக்கு...

நான் தூக்கம் தொலைத்து
உன்னுடன் கைபேசியில்...

உரையா
டிய
நாட்கள் எத்தனையோ...

தூக்கம் தொலைத்து உன்னை
நினைத்து கொண்டு இருக்கும்...

நாட்கள்
இனி
எத்தனையோ...

புயல் நின்றாலும் அது ஏற்படுத்திய
வடுக்கள் மறைவதில்லை...

நீ
என்
னைவிட்டு போனாலும்...

உன் நினைவுகள்
மறையப்போவதுமில்லை கண்ணே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (15-Jun-22, 4:55 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 410

மேலே