ரணமாக்கிய உன் வார்த்தைகள் 555
***ரணமாக்கிய உன் வார்த்தைகள் 555 ***
ப்ரியமானவளே...
உன்னைவிட்டு நான்
விலக நினைக்கிறன்...
என்னை விட்டு
விலகாமல் தொடர்கிறது...
நீ கொடுத்த
உன் நினைவுகள்...
என்
கண்களுக்கு தெரியும்...
நான் உன்மீது
கொண்ட அன்பு...
புரியாத புதிராகி
போனது என் வாழ்க்கை...
உனக்கு நான் சுமை
என்று எனக்கு தெரியும்...
என் இதயம் உணரவில்லை
உன்னைத்தேடியே வருகிறது...
தேடிவந்தேன் நீ
துரத்திவிட்டாய்...
மீண்டும் உன்னை தேடிவர
எனக்கு மனமில்லை...
ஒரு நிமிடம்
நீ யோசித்திருந்தால்...
வார்த்தைகளை
உதிர்த்திருக்க மாட்டாய்...
என்னை நீ
யோசிக்கவே இல்லை...
ரணமாக்கிய உன் வார்த்தைகள்
ஆறாத வடுக்களாய் என்னில்...
என் பிரிவு உனக்கு
சந்தோசம் என்கிறாய்...
முழு மனதாக நானும்
வழிவிடுகிறேன் உனக்கு...
என்
விழியில் வரும் கண்ணீர்...
உன்னை
கட்டாயப்படுத்த அல்ல...
நீ உணராத என்
அன்பை நினைத்து தான்.....
***முதல்பூ.பெ.மணி.....***
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
