வேதனைதான் நிலவுக்கும் இவளுக்கும்

பச்சை வண்ண வயக்காட்டில்,
படுத்துறங்கும் பயிர்கள்;
அடித்து வரும் தென்றல் காற்று,
அதனை அசைத்தே வீசும்;
பாய்விரித்த பச்சைப் பசும்புற்கள்,
பனித் துளிகளைச் சுமக்க பகலைவிரட்டும்;
பழுத்து விழுந்த கதரவனும்,
பொன்னிறத்தை பூச;
பொழுது சாந்த பொழுதில்,
புதிய சித்திரத்தை வடிக்கும் மேகம்;
பொன்னிற மேனியவள் சுமந்த நெற்கதிர்களுடன் தலைசாய்க்கும்;
இச்சை தீர்க்க வந்த ஜோடி பைங்கிளி,
இசையைக் கூட்டி,
கீச்கீச் என்று கீதத்தை எழுப்பிட,
கொரித்த பழத்தை கொத்தியும் கொதரியும்,
உண்டும், ஊட்டியும்;
காதல் லீலை புரியும்;

சாந்த பொழுது,
சாயத்தைப் பூசி,
சனநேரத்தில் சயனம் கொள்ள முயல,
இரவும் இருள் ஆடையை உடுத்த;
எங்கும் இடுட்டாம்;
உருட்டும் யுவதியின் கண்போன்று,
இருட்டை விலக்கி,
எழுந்தது வெண்ணிலவும்,
நீல் வானில்;
விழுந்த இருட்டில்,
விளக்கைப்பிடித்தது நிலவும்;
உலாவும் நிலவுக்கு,
துணையாய் ஓராயிரம் நட்சத்திரங்கள்,
உதிர்ந்தே, வானவீதியில் அழகைக் கூட்டும்;
வட்டக் குளத்தில்,
வழுக்கி விழுந்தே ,
துள்ளி விளையாடும் மீன்கள்,
தள்ளியே விழ,
தடுமாறிய தவளையாரும்,
தலைதெரிக்க ஓட,
குவளை விழித்தால்,
சமைந்த குமரியாக;
காய்ந்த நிலவும், கட்டழகை
கட்டிக்கிடந்த தடாகத்தில்,
முகம் பார்க்க,
ஒட்டிக்கொள்ள ஆசைப்பட்ட
நீரும் உரசிப்பார்க்க,
தடுமாற்றம் தான்;
தடாகத்திற்கு தடுமாற்றம் தான்;

தண்ணீரும் பூங்காற்றில் தத்தி விளையாட,
சுத்திக்கிடந்த இருளும்,
தட்டு தடுமாற;
கைதொட்டு தண்ணீருடன் விளையாட விரைந்ததாம் நாணலும்
பொத்திக்கிடந்த புதரிலிருந்து,
புறப்பட்ட பாம்பும் சுத்திவர,
கத்தி கதறி ஓட நினைத்ததாம்
தவளையாரும் .
இருட்டும் பொழுதில் நிலவுக்கும் இவளுக்கும் என்ன வேலையாம் ;
ஆம்
நிலவும் இவளும்,
அழகும் அர்பூதமும்,
பழுத்த நிலவும், பழகிய இவளும்
பழம் சுவையாம்;
நிலவும் நீல் வானத்தில் மலர்ந்தது;
நினைவும் இவள் மனத்தில் மலர்ந்தது;
நிலவு மகள் இரவைத்தேடி வந்தாள்;
இரவி மகள் இவளோ இவனைத்தேடி வந்தாள்;
நிலவும் வடித்தது படர் ஒலியை சுமந்து;
அவளும் வடித்தால் அடர் நிற அழகை சுமந்து
ஆம்
நிலவோ இரவின் உறவு;
இவளோ இவனின் உறவு;
நிலவின் வரவு இரவுக்கு விருந்து;
இவளின் வரவு இவனுக்கு விருந்து;
இருளை சுவைத்தது நிலவு,
இரவை சுவைத்தது இவள் உடலு,
விண்ணீல் வீற்று விடைதேடி தேடி தேய்தே போனது நிலவு,
மண்ணீல் வீற்று விடுதலை தேடி தேடி தேய்ந்தே போனது இவளது தேகம்;
ஏங்கித் தவித்தது விண்ணில் நிலவு,
ஏங்கித்தவித்தது விழிக்குள் இவளது நினைவு;
நிலவைத் மறைத்தது கார்மேகம்;
அவள் முகத்தை மறைத்தது கருங்கூந்தல்;
புவிக்கு பொட்டானது நிலவு;
பொட்டே நிலவனாது இவளது முகத்தில்;
போட்டி, நிலவுக்கும் இவளுக்கும் தான்;
அழகு யார், யார், என்பதில் அப்படி போட்டியாம்;
எப்படியும் நாம் தான் வெற்றிபெற வேண்டும் என்று
வர்ணத்தை பூசியதாம் நிலவு,
வடித்தே அழகை கூட்டியதாம்,
எப்படியும் நாம் தான் வெற்றிபெற வேண்டும் என்று
வண்ண சாந்தை பூசியே வனப்பை கூட்டினாலாம் இவளும்
உலர்ந்த இருளில் உலா வந்ததாம் நிலவு
உலர்த்திய கூத்தலில்,
உலாவும் மங்கையும் ,
உறக்கம் வராது தவிக்க,
உறைந்த இரவும்,
உடன்பட்டு உலகை மறந்து,
இவள் உடலை வதைக்க,
உயிரோவியம் வரைந்ததாம் இரு உடல்கள்,
கண்கள் தத்தை மொழி பழக,
இமைகள் மௌனமாக,
வித்தைக்கு தயார் ஆனதாம்;
இதழ்கள் சுதிசேர்த்து;
மெருகேரிய உடம்புதான்,
மெல்ல நனைந்த உதடுகள் தான்;
மெய் சிலிர்க்க வைத்த பொழுதுதான்;
வித்தைகாட்டிய வனப்புதான்;
விரட்டி வந்த மோகம் தான்;
விடிய விடிய விளையாட்டுத்தான்;
விடுபட்டது இரவுதான்;
விலகு அத்தான் விலகு அத்தான்
என்க
விளக்கத்தான் என்று அவன்
உண்க,
விளக்கு ஒளி விடுதலை பெற்றதாம் ;
மெல்ல நனைத்தது மழை மேகம் நிலவை ;
வித்தை கட்டியதோ விரட்டி வந்த கார்மேகம் தான்;
விளையாட தவித்தது முகிலும் நிலவும்
விளக்கத்தின் தவித்தது இரவு;
விளக்கை ஏற்றியதாம் மீண்டும் விடுதலை பெற்று (கருமேகத்திடம் இருந்து) நிலவும்,
வென்றார் யாரோ!
வீழ்ந்தார் யாரோ!
மாண்டிலரே!
மௌனத்தை விரட்டியது,
எங்கோ ஏக்கத்தில் ஓலம் இட்ட நாயும்,
நையாண்டி செய்த தவளையும்;
காலைச்சேவல் வேலைபார்த்து
கூவ;
சலித்துபோன மேனியும் சிலித்து பார்க்க;
வளைத்துப்போட்ட மேகமும் வந்தே விரட்ட;
இருதயம் இல்லாத இரவும் பொழுதை தேட;
பொல பொல வென்று விடியலும் துவங்க,
வேதனைதான் நிலவுக்கும் இவளுக்கும்
அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (25-Jun-22, 9:33 pm)
பார்வை : 41

மேலே