கடவுளை காட்டி விட்ட மகிழ்ச்சி

சிறுவயதில்
தூரத்து பூங்காவில்
விளையாடும் சமயங்களில்
அருகினில்
பூஜை மணி கேட்டு விட்டால்
ஓடி விடுவேன் கோயிலுக்குள்.,

விபூதி குங்குமம் ஒரு, கையில்,
பொங்கல் பிரசாதம் ஒரு கையில்
வாங்கி கொண்டு ஓட்டம் பிடிப்பேன்
அம்மாவிடம்.,

அம்மா விபூதி இட்டுக் கொன்டு
கடவுளை கும்பிட்டு
பிரசாதத்தை
ஒரு கவளம் வாயில் போடும் போது
கடவுளையே
வீட்டிற்குள் காட்டி விட்ட
மகிழ்ச்சி எனக்குள்..

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (2-Jul-22, 3:45 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 224

மேலே