கார்த்திகை திருநாள்
நித்தமும் மலை முகட்டில் அந்தி சாயும் பொழுதில்
சுடர் மிகு கதிரவன் கார்த்திகை தீபமாய் ஒளிர்ந்திட
செம்பொன் கதிர் மழையில் கல் மலை சுடர் மலையாய்
அண்ணாமலையாய் வானளாவ ஓங்கி ஒளிர்ந்திட
நிலமடந்தை வையத்து வாசலிலே நிலவொளி ஏற்றினாள்
வையத்து கூரையெல்லாம் மின்மினி விளக்கேற்றினாள்
அண்ணாமலையார் நினைவில் ரசிக்கும் காட்சி
பகலும் இரவும் சேர்ந்த அந்தி பொழுதெல்லாம்
அர்தநாரீசன் தரிசனம் அனுதின காட்சியாக
நித்தம் நித்தம் கார்த்திகை தீபத் திருநாளே .

