முகக்கவசம் மேல்நின்று

அப்படி ஒன்றும்
அழகில்லை அவளென்று
எத்தனை முறையோ
எதிர்கடந்து விட்டேன்
கீற்றுகளின் இடைவரும்
கதிரொளி போல
மேகத்திரளிடை ஒளிரும்
விண்ணொளி போல
இடைவெளிப் பேணி
உயிர்வலி தவிர்க்கவா?
முகக்கவசம் மேல்நின்று
அகங்குளிர செய்கிற
கயல்விழியில் கலந்தினி
கவிக்காதல் பொழியவோ?

எழுதியவர் : காசி தங்கராசு (3-Jul-22, 6:30 pm)
பார்வை : 50

மேலே