வண்ணப்புறாக் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஈளை இரைப்போ(டு) இரத்தபித்தம் போக்கிவிடும்
வாளைவென்ற கண்ணாய் மலங்கழிக்கும் - நாளுமோ
அன்னமூட் டும்பசிமூட் டும்மருசி ஓட்டு(ம்)நல்ல
வண்ணப்பு றாவைநுகர் வாய்

- பதார்த்த குண சிந்தாமணி

இது கோழை, சுவாசம், இரத்த பித்தம், அருசி, சுவையின்மை இவற்றை நீக்கும்; பசியைத் தரும்; உணவைச் சாப்பிட வைக்கும்; மலமிளக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-22, 9:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 19

மேலே