கிளுவைக் கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பாலிலா மாத(ர்)கட்குப் பாலுமுண்டாம் போகமுமாந்
தாலமிசை பித்தந் தரிக்குமோ - சாலச்
சிரங்குபுண்கள் எல்லாமே சீழ்வற்றி ஆறும்
அருங்கிளுவை யைத்தின்(று) அறி

- பதார்த்த குண சிந்தாமணி

இதனை உண்டால் பெண்கட்கு தாய்ப்பால் விருத்தியாகும்; வீரிய விருத்தி உண்டாகும்; பித்தம், கிரந்தி, இரணம், நமைக்கிரந்தி, சிலேட்டுமம், வாதம் இவை உண்டாகும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-22, 12:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

சிறந்த கவிதைகள்

மேலே