தென்றலும் இவள் கூந்தலைத் தழுவி

மலர்களைத் தொடாதே பறிக்காதே என்ற
பலகை வைத்த தோட்டத்தில்
இவள் மட்டும் எப்படி
மலர்களைத் தொடுகிறாள் சிரிக்கிறாள் பறிக்கிறாள் !!!
தென்றல் தொட்டல்ல இவள் தொடாமல்
மொட்டுக்கள் மலர்வதில்லை இந்தத் தோட்டத்தில் !
தென்றலும் இவள் கூந்தலைத் தழுவி
நன்றி சொல்கிறது பார் !
செய் நன்றி மறக்காத பூந்தென்றல் !

எழுதியவர் : கவின் சாரலன் (9-Aug-22, 10:59 am)
பார்வை : 163

மேலே