பெண்ணே பெண்ணே..
பெரிய பெரிய
சந்தோஷங்களை கூட
சிறிதாக எடுத்து
கொள்ளும் பெண்ணே..
சிறு கஷ்டங்களை
மட்டும் ஏன் பெரிதாக
எடுத்துக் கொள்கிறாய்..
கூறுவதை
கூர்மையாக கவனி
உன் அழகை
வர்ணிப்பது முதல்
அடி உனக்கு..
உன் திறமையை
வெளிப்படுத்தாமல் இருக்க
அடுத்தவர் கூறும்
முதல் யோசனை
உன் அழகு..
அழகு புரிந்தால் பரவாயில்லை
உன் திமிரை அதிகப்படுத்து
எதையும் சாதிக்க உன்னால்
முடியும் எனும் முதலில்
நீ நம்பு..