புத்திரசீவி விதை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஆகியதோர் மூலம் அனல(ம்)வெட்டை மேகமும்போம்
போகம் விளையும் பொருமலறுந் - தாகம்போம்
புத்திர சீவியெனப் போற்றும் விதையதனால்
இத்தரையுண் மாதே யியம்பு

- பதார்த்த குண சிந்தாமணி

புத்திரசீவி விதையினால் மூலசுரம், வெள்ளை, நீர்ப்பிரமேகம், வயிற்றுப்பிசம், நாவறட்சி இவை நீங்கி , சுக்கிலம் பெருகும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Aug-22, 8:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 18

மேலே