புத்திரசீவி விதை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஆகியதோர் மூலம் அனல(ம்)வெட்டை மேகமும்போம்
போகம் விளையும் பொருமலறுந் - தாகம்போம்
புத்திர சீவியெனப் போற்றும் விதையதனால்
இத்தரையுண் மாதே யியம்பு
- பதார்த்த குண சிந்தாமணி
புத்திரசீவி விதையினால் மூலசுரம், வெள்ளை, நீர்ப்பிரமேகம், வயிற்றுப்பிசம், நாவறட்சி இவை நீங்கி , சுக்கிலம் பெருகும் .