தாயின் பாசம்
தாயின் பாசம்.
வெல்லம்,
வெள்ளத்தில்
கரைந்து விடும்.
பணம்,
பண வீக்கத்தில்
கரைந்து விடும்.
நட்பும் உறவும்,
பொறாமையில்
கரைந்து விடும்.
உடல் அழகு,
காலத்தோடு
கரைந்து விடும்,
சேர்ந்தே! கரையும்
காமமும் மோகமும்.
கரையாதது எது?
கரையாதது
தாயின் பாசம்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.