ஒரு கவிதை
ஒரு கவிதை
=============
எழுத எழுத எப்போதும் வந்து போகும் வரிகள்
எழுதாத போதெல்லாம் ஏனென்று கேட்பதில்லை.
எழுத நினைத்தாலும் எழுத விடுவதில்லை
எப்போதும் சுற்றி வரும் வேலைப்பளு.
எழுதவேயில்லையென உள்ளுக்குள் உரைத்தாலும்
எழுதாமல் இருப்பதே வழக்கமாகிவிட்ட இந்நாட்களில்
எழுத அமரும் போது எப்படியோ வந்துவிடுகிறது
எப்போதும் போல ஒரு கவிதை!
(எங்கே கவிதையென கேட்டு விடாதீர்கள்.
அப்புறம் கவிதை கோபித்துக்கொள்ளும்)
அ.வேளாங்கண்ணி