தப்பாய் போய்விடுமே
உன் விழியோர மையெடுத்து
கவி எழுத முனைகிறேன்.
உன் இதழோர பொய்யெடுத்து
கற்பனையில் மிதக்கிறேன்.
மைய்யோ....பொய்யோ...
மெய்யாகவே உன்னோடு
வாழ்ந்திடவே துடிக்கிறேன்.
உப்பாய்
மெய்யும்பொய்யும்
சேர்த்தால்தான்
காதலில் சுவை கூடும்...
ஊடலில் சுவை கூட்டும்.
உப்பை சேர்ப்பதில்தான்
கவனம் கொஞ்சம் தேவை.
வெறும் உப்பாய் கரித்துவிட்டால்
விருந்து தப்பாய் போய்விடுமே...