சுந்தந்திர தின நாள் வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி நிறைந்த சுதந்திர தின வாழ்த்துக்கள்
மக்கள் அனைவர்க்கும்.
என்றும் சுதந்திரம் எங்கும் சுதந்திரம்
பொங்கி வழிய பொன்னான இந்நாளில்
போற்றி புகழுரைக்கின்றேன்.......
வந்து வரம் கொண்டதில்லை
நம் முன்னோர் பெற்று தந்த வரம்
நம்மவர்க்கு
சுதந்திரமாய் கண்டோம் நம் வாழ்வில் ,

சுதந்திரம் என்பதில் நிறைவு
தன்னிறைவில் நாடு துலங்கிட வேண்டும்
சுதந்திரம் எனும் ஒளியில் மக்கள்
மிளிர வேண்டும்
அன்று போல் இன்று இல்லை மனிதனின்
எண்ணங்கள்
ஏன்/ ஏன் /அன்று ஓன்று என்றான் எல்லோரும் ,
இன்றோ நான் யாரோ, நீ யாரோ /எனும்
போக்கில் பண்பற்ற
பொறுப்பற்ற மனநிலையில் மக்கள்.
,
ஆனாலும் அடிமனதை வருடுகின்ற
சுதந்திரம் எனும் சுய கவுரவம்
நம் மனதை கொள்ளை கொள்ளும் அளவுக்கு
கொடி கட்டி பறக்கிறது ,. இது பொய்யல்ல
உண்மையின் ஆறுதலும் உறுத்துகின்ற
சிந்தனையும் ,அன்று சுதந்திரம் பெற்றிராவிட்டால்
கேள்விக்குறியே /

நாம் பெற்ற சுதந்திரம் நம்மை தலை நிமிர்ந்து
நடந்திட வழிகாட்டுகிறது
வாழ்த்துவோம் சுதந்திரமதை
என்றென்றும் வளம் நிறைந்த நம் நாட்டில்
போற்றுவோம் பொங்குகின்ற உவகையுடன்
வாழ்க சுதந்திரம் வற்றாத உரிமையினால்

எழுதியவர் : பாத்திமாமலர் (15-Aug-22, 1:32 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 28

மேலே