ஏன் அதில சேர்ந்தான்

ஏன்டா அழகுகிரி முதுகலைப் படிச்சுட்டு தனிப்பயிற்சி (Tutorial College) நிலையித்தில பாத்த வேலையை ராஜினாமா பண்ணிட்டு அந்தக் கட்சித் சேந்துட்டான்?
@@@@@
உருண்டு புரண்டு படிச்சு குறைஞ்ச‌ மதிப்பெண் வாங்கித் தேறியவன் கிரி.
ஆரம்பக் பள்ளில இருந்து முதுகலைப் படிப்பு வரை நம்ம கூடப் படிச்சவன். படிக்கிற காலத்திலேயே ரவுடித்தனத்துக்குத் தனி முத்திரை பதித்தவன். அவன் தகுதிக்கேத்த கட்சில சேந்துட்டான். இப்பப் பாரு சுவரொட்டில எல்லாம் 'பேராசிரியர் அழகுகிரி'-னு விளம்பரம் செய்யறாங்க.

ரவுடித்தனத்தக்கும் மரியாதை. வாழ்க.

எழுதியவர் : மலர் (23-Aug-22, 7:31 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 49

மேலே