ஆகாயம் இடமாய் வாக்கு வந்து வசனிக்கும் - உண்மை விளக்கம் 15
திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா
(’க்’ ‘ற்’ வல்லின எதுகை)
வாக்(கு)ஆகா யம்இடமாய் வந்துவச னிக்குங்கால்
போக்காரும் காற்றிடமாய்ப் புல்கியனல் – ஏற்கும்
இடுங்கை குதநீ ரிடமாய் மலாதி
விடும்பா ரிடம்உபத்தம் விந்து. 15
- உண்மை விளக்கம்
பொழிப்புரை:
ஆகாயமிடமாக நின்று வாக்குப் பொருந்தி வார்த்தை சொல்லும்,
வாயுவினிடமாக நின்று பாதம் கமனஞ் செய்யும்,
தேயுவினிடமாக நின்று பாணி இடுதல் ஏற்றல் செய்யும்,
அப்புவினிடமாக நின்று பாயு மலசலங்களைப் பிரித்தல் செய்யும்,
பிருதிவியினிடமாக நின்று உபத்தம் விந்துவை விடுத்து ஆனந்தஞ் செய்விக்கும்.