சில பேர்

சில பேர்
நம் அறியாமையை
பயன்படுத்திவிட்டுச்
செல்வார்கள்...

சில பேர்
நம் உழைப்பை
உறிஞ்சிவிட்டு
காணாமல்
போய்விடுவார்கள்...

சில பேர்
நாம் செய்ததை
அவர்கள் செய்தது
போல் காட்டி
பாராட்டுப் பெறுவார்கள்...

சில பேர்
நம்மை முடக்கி
அவர்களை
உயர்ந்தவர்களாய்
காட்டுவார்கள்...

சில பேர்
நம்மிடம் உதவியை
வாங்கிய பின்
நம்மை புறந்தள்ளிவிட்டுச் சென்றுவிடுவார்கள்...

சில பேர்
நம் முன் நம்மைப்
புகழ்ந்துவிட்டு
பிறர் முன் நம்மை
இகழ்வார்கள்...

இப்படி வாழ்க்கை பல பேரை நமக்கு சூழ்நிலைக்கேற்ப அடையாளம் காட்டிவிட்டுச் செல்கின்றது...

இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (2-Sep-22, 2:22 pm)
சேர்த்தது : அறூபா அஹ்லா
Tanglish : sila per
பார்வை : 102

மேலே