என் தந்தை என் மகாத்மா
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தமிழ்ப்பாட்டி ஔவையார் சொன்ன மந்திரம்
தந்தை என்ற சொல்லே மந்திரம்
தன்னால் வந்த உணர்வு எனக்கு
தனக்குப் போக தானம் பழமொழி
தந்தது போக மீதி அப்பாவழி
தார்பூசிய சாலையில் கால்கள் வெந்தாலும்
தனயனுக்கு காலணி போட்டு மகிழ்ந்தார்
தாய்போல அன்பை வெளியே கொட்டவில்லை
தனக்குள் அடக்கி வைத்து பூரித்தார்
திக்குத் தெரியாமல் நின்ற போதெல்லாம்
தன்னை வருத்தி வழிகாட்டி நின்றார்
தன்னிலையை தாழ்வாய் எண்ணியது இல்லை
தனயன் தலைதூக்க துணையாய் நின்றார்
தன்னுறக்கம் மறந்து என்னுறக்கம் கலைய
தட்டி எழுப்பினார் அதிகாலை படிக்க
தரமுயர்ந்து தலைதூக்கி நான்நின்ற போதும்
தனக்கென கோரிக்கை வைக்காத மகாத்மா
தூர நின்றே பிரமித்தேன் அவரை
தழுவி என்னன்பை காட்டாமல் போனேனே
திட்டிய போதெல்லாம் மனது வலித்தது
திட்டி உரிமையாய் கண்டிக்க இன்றில்லையே
தாத்தா என்று பிள்ளைகள் விளிக்க
தந்தையவர் எம்மிடையே இன்று இல்லையே