காதல் தோல்வி கவிதை
💔💔💔💔💔💔💔💔💔💔💔
*கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
💔💔💔💔💔💔💔💔💔💔💔
காதலித்த
நாங்கள்
இருவரும்
ஊர்வலத்தில்தான்
போய்க்கொண்டிருக்கிறோம்...
ஆம்....!
அவள்
கல்யாண ஊர்வலத்தில்...
நான்
கடைசி ஊர்வலத்தில்....
💕💕💕💕💕💕💕💕💕💕💕
பெண்ணே!
உன்னால்
இறந்ததை நினைத்து
நான்
வருத்தப்படவில்லை...
இன்னொரு முறை
இறப்பதற்கு
வாய்ப்பில்லையே! என்று
வருத்தப்படுகிறேன்....
ஆம்....!
எனக்காக
நீ
இரண்டு சொட்டு
கண்ணீர் விட்டாய் அல்லவா....?
💕💕💕💕💕💕💕💕💕💕💕
பெண்ணே.!
கடிதமாய் வந்தேன்
கிழித்துப் போட்டாய்...
தென்றலாய் வந்தேன்
சன்னலை சாத்தி வைத்தாய்....
ரோஜா மலராய் வந்தேன்
தூக்கி எறிந்தாய்....
மழையாய் வந்தேன்
குடைப்பிடித்தாய்......
மௌமாய் வந்தேன
கண்டபடி திட்டினாய்.....
பிணமாய் வருகிறேன்
கண்ணீர் வடிக்கின்றாயே...?
*கவிதை ரசிகன் குமரேசன்*
💔💔💔💔💔💔💔💔💔💔💔