குடைக்குள் ஒரு முத்தமழை 555
***குடைக்குள் ஒரு முத்தமழை 555 ***
உயிரானவளே...
பார்வையென்னும் விழிகளால்
உன்னை காணவைத்தான் இறைவன்...
அழகி உன்னை காணவே
கண்கள் எனக்கு படைத்தானோ...
கண்களால்
நீ முத்தம் தர...
இரவெல்லாம் ஈரமானது
என் கன்னங்கள்...
பலவகை கனிகளை
நான் சுவைத்திருக்கிறேன்...
உன் கன்னங்களையும் இதழ்களையும்
சுவைத்த சுவையை போல...
வேறெந்த கனியும்
எனக்கு ருசிக்கவில்லையடி...
காலமெல்லாம் எனக்கு
மட்டுமே கொடுத்துவிடடி...
உன் இதழ்களையும்
கன்னங்களையும்...
குடைக்குள்
வராத மழையை...
நீ வரவைத்தாய்
உன் முத்தத்தால்...
குளிருக்கு இதமாக
உன் நெஞ்சோடு...
என்னை
அனைத்துகொள்ளடி காலமெல்லாம்.....
***முதல்பூ.பெ.மணி.....***