நீயான சுக துக்கம் குறியா வினையென்று கொள் - உண்மை விளக்கம் 22
திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா
ஆறாறு தத்துவமும் சொன்னோம் அடைவாக
மாறா மலமிரண்டும் வாசொல்லக் – கூறில்
அறியாமை ஆணவம்நீ யானசுக துக்கம்
குறியா வினையென்று கொள். 22
- உண்மை விளக்கம்
பொழிப்புரை:
முப்பத்தாறு தத்துவங்களையும் முறையாகச் சொன்னோம்,
விட்டு நீங்காமல் இிருக்கின்ற ஆணவ மலத்தையும் கன்ம மலத்தையும் சொல்லுகிறோங் கேள்,
சொல்லுமிடத்து அறியாமையைப் பண்ணிக் கொண்டு நிற்பது ஆணவ மலம்,
சுகதுக்கமொன்றையும் நினையாமல் நீ தானாயிருப்பது தானே கன்ம மலமென்று அறிவாயாக.