கண்டதுபாத் துண்டல் புலாற்குடிலால் ஆய பயன் - அறநெறிச்சாரம் 172

நேரிசை வெண்பா

பட்டார்ப் படுத்துப் படாதார்க்கு வாட்செறிந்து
விட்டொழிவ தல்லாலவ் வெங்கூற்றம் - ஒட்டிக்
கலாய்க்கொடுமை செய்யாது கண்டதுபாத் துண்டல்
புலாற்குடிலால் ஆய பயன் 172

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

முற்பிறப்பில் அறம் செய்யாது குறைந்த வாழ் நாளை இப் பிறப்பில் பெற்றோர்களைக் கொன்றும், முன்னை அறம் செய்தலால் நீண்ட வாழ்நாளைப் பெற்றோர்க்கு அவர்க்கு முன் தன் வாளையுறையுள் புதைத்து அவரைக் கொல்லாது விடுதலை செய்து செல்வதல்லாமல் கொடிய யமன் தன்மனம் சென்றவாறு முறையின்றிக் கோபங் கொண்டு துன்பம் செய்யான்;

ஆதலால், ஒருவன் தனக்குக் கிடைத்த பொருளைப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுத்துத் தானும் உண்டல் புலாலினாலாய உடம்பினைப் பெற்றதாலுண்டாம் பயன் ஆகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-22, 12:29 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

சிறந்த கட்டுரைகள்

மேலே