திருமால் துதி

மாதவன் மாயவன்
பாதகம் தீர்க்கும் பரமன்
கீதையின் நாயகன்
ஆதிபகவன் அவனே

எண்ணம் எழுத்தெல்லாம்
கண்ணன் கண்ணனே
எண்ணும் நாமம்
என்றும் காரணன் கேசவனே

அன்னைக்கு சேய்யவன்
அன்பு கோபிக்கு காதலன்
வேண்டும் அடியார்க்கு
என்றும் சேவகன்

எந்தை ஏகாந்தன்
பாதகம் தீர்க்கும்
பரமன் அமுதன்
பதுமநாபன் பவித்திரன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Sep-22, 1:41 pm)
பார்வை : 60

மேலே