ஓரவிழிகள்காதல் சாரல் தூவுது

ஓரவிழி கள்காதல் சாரல்
......தூவுது அந்த
ஈரத் தென்றலில் இதயம்
.....நனையுது அந்தி
ஆரஞ்சு வானம் அதனை
.....ஓவியம் தீட்டுது
வாரக் கடைசி நம்மை
.....வரவேற்குது மறந்துவிடாதே !

யாப்பார்வலர்களுக்கு மட்டும் :---

....இயைந்த எதுகை 5 சீர் 4 அடிகள்
கலித்துறை
ஈற்றுச் சீர் நிரை நிரை நேர் நேர்
நாலசைச் சீர் பொதுவாக எழுதப்
படுவதில்லை
மறந்திடாதே நிரை நிரை நேர்
மூவசை யிலும் படித்துக் கொள்ளலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Oct-22, 8:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே