ஓரவிழிகள்காதல் சாரல் தூவுது
ஓரவிழி கள்காதல் சாரல்
......தூவுது அந்த
ஈரத் தென்றலில் இதயம்
.....நனையுது அந்தி
ஆரஞ்சு வானம் அதனை
.....ஓவியம் தீட்டுது
வாரக் கடைசி நம்மை
.....வரவேற்குது மறந்துவிடாதே !
யாப்பார்வலர்களுக்கு மட்டும் :---
....இயைந்த எதுகை 5 சீர் 4 அடிகள்
கலித்துறை
ஈற்றுச் சீர் நிரை நிரை நேர் நேர்
நாலசைச் சீர் பொதுவாக எழுதப்
படுவதில்லை
மறந்திடாதே நிரை நிரை நேர்
மூவசை யிலும் படித்துக் கொள்ளலாம்