உத்தமர் ஒன்றல்ல தீயரும் கோடியில்
திண்மையின் நல்லான் திகழ்வதோ ஆயிரம்
எண்ணிடத் தீயரோ பன்மடங்கு -- உண்மையது
எண்ணுவதென் கண்டிடு எங்கு மெதெதிலும்
ஒண்டியல்ல எண்ணிடாக் கூட்டு
நல்லனாக உலகில் ஒருவனே என்று கூற இயலாது
நல்லவனில் மனம் வாக்கு செயல் என்றதை பலவகை
இடம் பொருள் ஆவி பொறுத்து பிரிவு பிரிவாக பல ஆயிரம்
உண்டு. இதேபோல் தீயவனில் நல்லானில் காட்டிலும்
பன்மடங்கு ஆயிரங்கள் இருக்கிறது. அவையெல்லாம்
கணக்கிட முடியாது. ஆகையா நல்லவன் எல்லா விதத்தில்
நல்லவனும் கெட்டவன் எல்லா விதத்திலும் கெட்டவன்
என்று தீர்க்கமாய் சொல்லமுடியாது. இது கடவுளுக்கே
வெளிச்சம். நாமறிய முடியாது
......

