மயங்குகிறாள் ஒரு மாது

மயங்குகிறாள் ஒருமாது
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

மயங்குகிறாள் ஒருமாது
மனமெல்லாம் புயலாக /
தயங்குகிறாள் சிறுபோது
தன்மானம் தலைதூக்க /

மலராக மொட்டவிழும்
மர்மங்கள் சுட்டிடுமோ /
உலகோரின் கட்டுகளும்
உத்தமனை விட்டிடுமோ/

பாதைகளைப் பார்த்தபடி
பாவியிவள் ஏங்குவதோ /
வாதையெலாம் போதுமென
வாராயோ மன்னவனே /

துயரெமெலாம் துடைத்துவிடத்
துன்பமெலாம் அகற்றிவிட /
உயிரெல்லாம் உணர்வினிலே
உற்சாகம் பொங்கிடுமே/

போதுமொரு வார்த்தையுமே
புனிதையவள் பூரிக்க /
மோதுகின்ற எண்ணமெலாம்
மோகனமே பாடிடுமே //

-யாதுமறியான்.

எழுதியவர் : ! -யாதுமறியான். (17-Nov-22, 8:27 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 100

மேலே