348 கடுஞ்சொற் கூறுவோர் கயவரே ஆவர் – இனிய சொற்கூறல் 5

கலிவிருத்தம்
(கூவிளம் கருவிளங்காய் கூவிளம் புளிமா)

வன்மொழி யுரைக்கினெதிர் வன்மொழி கிடைக்கும்
இன்மொழி யுரைக்கின்வரு மின்மொழி யெமக்கும்
நன்மொழிக ளேபல விருக்கநவி லாமற்
புன்மொழி யுரைப்பவர்கள் பூரியர்க ளன்றோ. 5

– இனிய சொற்கூறல். நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நாம் யாருடனும் வன்மொழி பேசினால், உடனே நமக்கும் வன்மொழியே கிடைக்கும். இன்சொல் சொன்னால் இன்சொல்லே நமக்கும் கிடைக்கும்.

நல்ல சொற்கள் பல இருக்க அவற்றைப் பேசாது இழிவான கடுஞ்சொல் பேசுவோர் தாழ்வானவர்கள் அல்லவா!” என்கிறார் இப்பாடலாசிரியர்.

பூரியர் - தாழ்வானவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-22, 2:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே