வெறிநாய்
நேரிசை வெண்பா
தெருநாய் வெறிநாய் திரும்பக் கடிக்கும்
விரும்பியதை சேர்க்காதே வீட்டில் -- திரும்பா
அதுவுன் சிகிச்சைக் கடங்கிடாக் குக்கல்
ஒதுங்கி வெறிநாயை ஓட்டு
வெறிபிடித்த நாய்க்கென்ன தெரியும் கடித்து மற்றவர்க்கும் வெறியூட்டிக் குலைக்க செய்யும் கொடியநாய். அதன் கடியால் பலரும்வெறிநாய் போல குலைப்பர். அது வைத்தியம் செய்து கொள்ளாது . வைத்தியமும் செய்ய விடாது வைத்தியனையேக் கடிக்கும்... உறுமும் ஜொள்ளுவிடும். இதுவே அதன் அடையாளம்.......வெறிநாய் குணப்படுத்தவே முடியாது.... அதனால் என்ன? வெறிநாயால் கடிபட்டவருக்கு வைத்தியம் செய்வோம் பிழைப்பர்.