சினத்தை வென்றவர் சிவபதம் பெறுவர் - அறநெறிச்சாரம் 206

நேரிசை வெண்பா
(’த்’ ‘க்’ வல்லின எதுகை) (’ய்’ இடையின ஆசு)

கட்டெனச் சொல்லியக்கால் கற்பிளப்பில் தீயேபோல்
பொட்டப் பொடிக்குங் குரோதத்தை - வெட்டெனக்
கா’ய்’த்துவரக் கண்டக்கால் காக்குந் திறலாரே
மோக்க முடிவெய்து வார். 206.

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

தம் மீது கோபமுற்று பிறர் வன்சொற்களைச் சொல்லுமிடத்தும்,

கடுகடுத்துத் தம்மைத் தாக்க வருதலைக் காணுமிடத்தும்,

கல்லை உடைக்கும்பொழுது அதனிடைத் தோன்றும் தீயேபோல் விரைந்து தோன்றும் கோபத்தை மிகுதியாகாதபடி அடக்க வல்லவர் யாரோ அவரே முக்தி இன்பத்தினை அடைபவராவார்.

குறிப்பு: மோக்கம் - மோட்சம்:

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-22, 6:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே