எரிமலையின் தீப்பொறி
எட்டையபுரத்து எரிமலையே
உன்னுள் பொங்கி எழுந்த
தீப்பிழம்புகளிலிருந்து வந்த
தீப்பொறிகள் இன்றும்
எரிந்து கொண்டுதான் இருக்கின்றன.
பாமர மக்களும்
சிந்தனை கொண்டு
நெஞ்சை நிமிர்த்தி எழ
விதைகளை விதைத்து
விட்டு சென்றிருக்கிறாய்..
பூவுலகம் இருக்கு வரை
விதைகள் மண்ணை
முட்டிக் கொண்டு
முளைத்துக் கொண்டே இருக்கும்..