முனிவரை யானும் இயல்பினர் என்பது இனத்தால் அறிக - பழமொழி நானூறு 237

இன்னிசை வெண்பா

முயலவோ வேண்டா முனிவரை யானும்
இயல்பினர் என்ப(து) இனத்தால் அறிக
கயலியலும் கண்ணாய் கரியரோ வேண்டா
அயலறியா அட்டூணோ இல். 237

- பழமொழி நானூறு

பொருளுரை:

சேலை ஒத்து விளங்கும் கண்ணை உடையாய்!

அயல் மனையாரால் அறியப்படாது சமைக்கப்படும் உணவோ இல்லை; ஆதலால், ஒருவரது இயல்பை யறிய மற்றொன்றால் அறிய வேண்டுவதில்லை;

முனிவரேயாயினும் நல்ல இயல்பினை உடையார் தீய இயல்பினை உடையார் என்பதை அவரால் கூடப்பட்ட இனத்தாரால் அறிக; ஆகையால், சாட்சி சொல்வோர் வேண்டுவதில்லை.

கருத்து:

ஒருவருடைய இயல்பை அவரது இனத்தால் அறியலாம்.

'அயலறியா அட்டூணோ இல்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Dec-22, 8:50 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே