தனியாக வீதியில் நீநடக்கும் போதில்

பனிசிந்தும் மார்கழிக் காலைப் பொழுது
கனிசிந்தும் கன்னம் கவிதையாய் மின்ன
தனியாக வீதியில் நீநடக்கும் போதில்
புனையுதுநெஞ் சோர்கவி தை

பனிசிந்தும் மார்கழிக் காலைப் பொழுது
கனிசிந்தும் கன்னம் இரண்டு - பனியில்
தனியாக வீதியில் நீநடக்கும் போதில்
புனையுதுநெஞ் சோர்கவி தை

-----இருவடிவில் வெண்பாக்கள்
யாப்பினை சரியான யாப்பாசிரியர்கள் யாப்புநூல் மூலம்
மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Jan-23, 10:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 137

மேலே