போய் சேர வேண்டி

போய் சேர வேண்டி.

மனித குலத்தின்
முன்னேற்றத்தை
முடமாக்குவது
மதமும், அரசியலும் தான்,

தன்னல வாழ்வுக்காக
தடம் பதிக்கும் சிலரின்
தகாத செயல்களால்
தகனமாகும் மக்கள் நலன்

பாவம் ஏழை மக்கள்
பாதையில் நின்று
புலம்பி அழுவார்கள்-சீக்கிரம்
போய் சேர வேண்டி

எழுதியவர் : கோ. கணபதி. (28-Jan-23, 9:11 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : ppoi sera venti
பார்வை : 38

மேலே