கூடு விட்டுப் பிரியும் ஆவி

உடற் கூட்டுக்குள்
அடைபட்டுக்கிடக்கும் ஆவி
ஓர் நாள் கூடு விட்டுப்
பறந்தே சென்றுவிடும்
கூட்டைச் சுற்றி உறவும்
ஊர்ச் சனமும் ஒப்பாரி வைத்து
சென்ற ஜீவனை
நினைவுகூர்ந்துகொள்கின்றன!
படைத்த இறைவன் எடுத்த உயிருக்காய் மன்றாடும் மனிதன் கண்டு சிரித்துக்கொள்கிறான்!

எழுதியவர் : ஜவ்ஹர் (12-Feb-23, 6:42 am)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 99

மேலே