விழியோரம் விரிசல்

விழியோரம் விரிசல்!
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

வழியெல்லாம் பூக்கள் வரப்போரம் தேக்கம் /

பழிபாவம் என்மேல் பரிதாபத்
தாக்கம் /

அன்புக்கு ஏங்கி அருளுக்கு
நீட்டி /

என்போடு தசையும் எதற்காக
வளர்த்தேன் /

காலங்கள் தாண்டி காதங்கள்
கடந்தே/

கோலங்கள் பூண்டு கோதைக்காய்
நின்றேன் /

ஊடலும் வேண்டும் ஊரெலாம்
ஏசிடும் /

தேடியே மாய்ந்தால் தெய்வமும்
காத்திடும்/

காவிரி உடைப்பிலே கரையோரம்
அமிழ்ந்திடும் /

விழியோர விரிசலில் வியனுலகே
முழ்கிடும்!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (5-Mar-23, 3:19 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 200

மேலே