லூஸு பண்டாரம்

நான் நடுவழியில் மாட்டிக் கொண்டு விட்டேன். ஆனால் தப்பிவிட்டேன். நான் மாட்டிக் கொண்டது என் சட்டையைக் தான்.

நான் பாலைவனத்தில் சிக்கிக் கொண்டு தண்ணீரைக் காணாமல் தவித்தேன். பிறகு என்னுடன் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து தண்ணீர் அருந்தினேன்.

தோசைக் கல்லில் சுடச்சுட சுட்டும் என் கைகள் சுடவில்லை. ஏன்? நான் சுட்டது சப்பாதிகளைத் தான்.

திருடன் என்னைப் பார்த்து இருபது தடவை துப்பாக்கியால் சுட்டான். கடவுள் அருளால் என் மீது ஒரு குண்டு கூட படவில்லை. திருடன் தான் தொலைக்காட்சி பெட்டியில் மாட்டிக் கொண்டு விட்டானே!

கிட்டத்தட்ட 130 கிமீ வேகத்தில் நான் காரில் சென்று கொண்டிருந்தேன். எதிரில் வந்த காரை ஏறக்குறைய என் கார் இடித்தேவிட்டது. அந்தக் கார் ஓட்டுநர் கீழே இறங்கி வந்து " அறிவு கெட்ட முட்டாளே, உனக்கு கண்ணு இருக்கிறதா? என்று திட்டிய போது நான் சிரித்தேன். என் கார் ஓட்டுநர் என்னைப் பார்த்து முறைத்தான்.

எழுதியவர் : Ramasubramanian (24-Mar-23, 6:21 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 77

மேலே