இரவும் நினைவும்..//

கடந்து போக தான்
துடிக்கிறேன் நினைவுகளை..//

இரவுகள் வந்தாலே
இழுத்து வருகிறது..//

தலையணை ஈரமாக்க
கனவோ நினைவோ..//

எப்படி சொல்லுவேன்
இதயம் அறுந்து போனதை..//

எனக்குள் ஊசி
ஏதும் இல்லாமல்
தைத்து வைத்து
இருக்கிறேன்..//

இப்படி இரவுகள்
நினைவுகளை கூட்டிட்டு
வந்து மீண்டும்
அறுப்பது ஏனோ..//

எழுதியவர் : (24-Mar-23, 11:02 pm)
பார்வை : 75

மேலே