இரவும் நினைவும்..//
கடந்து போக தான்
துடிக்கிறேன் நினைவுகளை..//
இரவுகள் வந்தாலே
இழுத்து வருகிறது..//
தலையணை ஈரமாக்க
கனவோ நினைவோ..//
எப்படி சொல்லுவேன்
இதயம் அறுந்து போனதை..//
எனக்குள் ஊசி
ஏதும் இல்லாமல்
தைத்து வைத்து
இருக்கிறேன்..//
இப்படி இரவுகள்
நினைவுகளை கூட்டிட்டு
வந்து மீண்டும்
அறுப்பது ஏனோ..//