கலியுகம்

நெஞ்சினில் ஈரம் சுரக்கா
பெருமனிதன் பெயரளவில்
நன்மனிதனாக நடமாடுவான்
சமுதாயத்தில்....!

குருதிதாகம் தனியா
பெருமனிதன், உறிஞ்சியே
உயிர்துறப்பான் உழவன்....!

விளைநிலம் விளையா
நிலமாகி பிளந்து
காட்டிடுதே தன் நெஞ்சை....!

உயிர் வற்றிய உடல்
பினமாய் நடமாடுது
நீர் வற்றிய நிலத்தில்....!

கரை யுடைத்து களவு
போயிடுமே உயிர், என்றபயம்
மிகவே மடையுடைப்பான்
சகமனிதன் இஃதே
கலியுகம்!!!!!!

எழுதியவர் : கவிபாரதீ (30-Mar-23, 6:58 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 79

மேலே