குழப்பம்
எல்லோரும் சரியாகத்தான்
நடக்கிறார்கள்.
எல்லோரும்
உண்மையாகவும்...
திண்மையாகவும்.....
திறமையாகவும்.....
தியாகியாகவும் ....
இருக்கிறார்கள்.
குறுக்கு வழியில்
வருபவர்கள்கூட
சட்ட ஒழுங்கை
ஓங்கிப் பேசுகிறார்கள்.
நான்தான் சரியில்லையோ என
தடுமாறி தவிக்கிறேன்.
இவர்களோடு சமாதானமாகவோ
அனுசரித்தோ போகமுடியாமல்
தனியாய்...அனாதையாய்
குழம்பி நிற்கிறேன்.