நினைவுகள் சிலவே நெஞ்சினில் தைத்த முள்ளே - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
நினைவுகள் சிலவே வாழ்வில்
..நெஞ்சினில் தைத்த முள்ளே;
கனவுகள் என்பதைப் போலே
..காட்சிகள் பலவாய் ஆகும்!
புனைந்திடுஞ் சாட்சி யாவும்
..பொய்யென ஆகும் நாளே
இனித்திடும் நாளே யாகும்
..இன்பமும் பலவாய்ச் சேரும்!
- வ.க.கன்னியப்பன்