நினைவுகள் சிலவே நெஞ்சினில் தைத்த முள்ளே - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

நினைவுகள் சிலவே வாழ்வில்
..நெஞ்சினில் தைத்த முள்ளே;
கனவுகள் என்பதைப் போலே
..காட்சிகள் பலவாய் ஆகும்!
புனைந்திடுஞ் சாட்சி யாவும்
..பொய்யென ஆகும் நாளே
இனித்திடும் நாளே யாகும்
..இன்பமும் பலவாய்ச் சேரும்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Apr-23, 7:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 20

சிறந்த கவிதைகள்

மேலே