பகல்கனவு காண்பதனால் பயனேது மில்லை - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(காய் 3 தேமா)
(1, 3 சீர்களில் மோனை)

பகல்கனவு காண்பதனால் பயனேது மில்லை;
பகட்டுகின்ற குணமதனால் பலனுமுண்டு தொல்லை!
தகுந்தவரும் உனைவிட்டுத் தான்செல்வர் எல்லை;
இகழ்ந்துரைத்தே ஏசிடுவர் இனியேது நன்மை?

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Apr-23, 3:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே