சாதனையல்ல செல்வம் குவிப்பது

" பழிஅஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல் "
குறளாசான் வாக்கு !
பழிக்குப் பயந்து , நல்ல நெறியில் பொருளீட்டி,
அதனைத் தக்கவர்க்குப் பகுத்து தந்து, தானும்
உண்டு இல்வாழ்வானாயின்,
அவர் குடும்பம் பொலிவுடன் விளங்கும்."
==========================
கருத்துரை செவிக்கு விருந்து
இன்பமான வாழ்விற்கு மருந்து
உள்ளத்தில் ஏற்றிடு உணர்ந்து
உலகில் வாழ்க்கையை நடத்து !
இருப்பதும் சேர்ப்பதும் பணம்
இல்லாதவர்க்கு தருவது குணம்
வந்தாரை வாழ வைக்கும் இனம்
தந்தாரை போற்றிடும் நம் மனம் !
அளவுக்கு அதிகம் தேவையல்ல
செல்வம் குவிப்பது சாதனையல்ல !
போதனையல்ல யான் கூறுவது
வேதனையை கண்டதால் பேசுவது !
பட்டினியுடன் பலர் இருக்க
அவர்தம் பசிதனை போக்க
இயன்ற வரையில் உதவிட
வாடிய முகங்கள் மலர்ந்திட !
வரும்போது ஒன்றும் இல்லை
எடுத்து செல்வது ஏதுமில்லை !
பேராசை எவருக்கும் பெருங்கேடு
புரிந்தவர் வாழ்வர் பெருவாழ்வு !
அடுத்தவர் வாழவழி வகுத்தால்
கேடில்லை கொடுத்து வாழ்ந்தால் !
வறுமை நீங்க உதவிடுங்கள்
பெருமை தானே வந்துசேரும் !
அளிப்பது நீங்கள் ஆனாலும்
மகிழ்வது ஏழை குடும்பங்கள் !
வாழ்ந்திடுவர் சீரும் சிறப்புமாக
வாழையடி வாழையாக தலைமுறைகள் !
உணர்வீர் வள்ளுவன் வாக்கை
உதவிடுவீர் உள்ளதில் முடிந்ததை !
முன்னோர் கூறிய அறிவுரையை
பின்னர் வந்தவர் ஏற்றிடுவோம் !
பழனி குமார்
03.05.2023